ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் ஒருநாள் குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழக ரெயில்வே போலீசார் 7 ஆயிரத்து 512 குழந்தைகளை மீட்டுள்ளனர். இதில் 699 பேர் பெண் குழந்தைகள் ஆகும். தற்போது 'உதயம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில்வே ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என அனைவருமே குழந்தைகளை தடுக்க செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார், கமிஷனர் சந்தோஷ் என்.சந்திரன், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.