உணவு இடைவேளை இன்றி ராஜ்யசபையில் குடியுரிமை திருத்த மசோதா மீது விவாதம்


புதுடெல்லி,

 

வட கிழக்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள மசோதா, குடியுரிமை திருத்த மசோதா ஆகும்.  நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.




இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணியளவில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  தாக்கல் செய்தார்.




 

இந்த மசோதா மீது விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும்.  இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற  மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

 

நாடு முழுவதும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.  தமிழகத்தின் சென்னையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்து உள்துறை மந்திரி அமித் ஷா பேசி வருகிறார்.  தொடர்ந்து மாநிலங்களவையில் உணவு இடைவேளை இன்றி விவாதம் நடந்து வருகிறது.












Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image