பாஜக பெண் தலைவர்!துப்பாக்கி சூடு நடத்தி கொரோனாவுக்கு எதிரான நிகழ்வை கொண்டாடினார்
க்னோ,

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4,289 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக போராட தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விளக்குகளை ஏற்றுமாறு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.  அவரது கோரிக்கையின்படி நாட்டு மக்கள் மின்விளக்கை அணைத்து விளக்கேற்றினர்.




 

தீவிரத்தை உணராத சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.  இந்நிலையில், ஒற்றுமை விளக்கேற்றும் நிகழ்வை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்ட பாஜக மகளிரணி தலைவி மஞ்சு திவாரி கைத்துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு அந்த காட்சியை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.  அந்த வீடியோவை அவரே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




 

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுற்றுக்கணக்கானவர்களின் குடும்பங்கள் மீளா துயரத்தில் உள்ள போது ஆளும் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டாடியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இது தொடர்பாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image