"உலக மரணத்திற்கு நானே காரணம் " கொரோனா கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்


இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை.சீனாவில் தான் கொரோனா பரவியது என கூறப்படுவது தற்போது முழு அளவில் நிரூபணமாகி இருக்கிறது.


சீனாவின் வூஹான் மருத்துவமனையில் ஒரு நோயாளி இருமல் காய்ச்சலுடன் டிசம்பர் மாதம் 30 ம் தேதி வருகிறார். இவருக்கு இந்த மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவர் ஏய் பென் இந்த நோயாளிக்கு ரத்த பரிசோதனை முடிவை பார்க்கிறார். முதலில் சார்ஸ் , புளூ காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இந்த டாக்டர் தனது மருத்துவ குழுவினருக்கு இந்த ரத்த பரிசோதனையை அனுப்பி வைக்கிறார். இது ஒரு புதிய வைரஸ் எனவே மேல் தரப்பு உத்தரவு இல்லாமல் வெளியே கூற முடியாது என சக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனை ஏய்பென் வெளியே தெரிவிக்க விரும்பி உள்ளார். ஆனால் மருத்துவ ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியினர் இந்த டாக்டரை அழைத்து எச்சரித்துள்ளனர்.



"வதந்திகளைப் பரப்புதல்" மற்றும் "ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவித்தல்" குற்றம் செய்ததாக அவர் கண்டிக்கப்பட்டார். இதனையடுத்து, வைரஸ் தொடர்பான செய்திகளையோ அல்லது படங்களையோ அனுப்ப ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.


இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரிட்டன் நாளிதழான கார்டியனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: நான் தான் இந்த புதிய வைரசை கண்டுபிடித்தேன். தொடர்ந்து வூஹான் மருத்துவமனைக்கு வந்த பலருக்கும் இது போன்ற தொற்று இருந்தது. ஒரு நோயாளி பாதிக்கப்பட்டபோது தொடர்பான விழிப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது உலகம் முழுவதும் நடக்கும் மரணத்திற்கு நானே காரணமாகி விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் டாக்டர் ஏய் பென் எங்கு இருக்கிறார் என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சீன அரசு அவரை தனிச்சிறையில் வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


 


Popular posts
தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் BDO நிர்வாகத்தை கண்டித்தும் பிச்சை எடுக்கும் போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
Image
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு - மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
Image
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா - பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
Image
உடல்நிலை சரியில்லாத மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவர்
Image